ஶ்ரீராமநவமி

“ஶ்ரீராமநவமி அன்று விரதமிருந்து வழிபடுவோம்!
ஸ்ரீராமரின் அருளை பெற்றிடுவோம்!”

ஸ்ரீராம நாமத்தை உச்சரிப்பதால் ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும். ஶ்ரீராமநவமி நாளில் விரதமிருந்து இறைவனை வேண்டிக் கொண்டால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை. குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலும், நாடியப் பொருட்கள் கைகூடும் என்ற ஐதீகம் உண்டு. ஶ்ரீராமநவமி விரதம் மேற்கொள்வதால் நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

Sri Rama Navami Wishes